கே.என்.நேரு முந்திரிக்கொட்டை போல்! ஏன் அவரிடம் சொன்னோம்னு ஃபீல் பண்றேன்! முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
சென்னை: அமைச்சர் கே.என்.நேரு முந்திரிக்கொட்டை போல் எல்லாவற்றிலும் முந்திக்கொள்வார் என திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காரில் வரும் போது ஏன் அவரிடம் இந்த விஷயத்தை சொன்னோம் என்று ஃபீல் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி திருமங்கலம் கோபால் இல்ல மண விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை பற்றி காரில் வரும் போது அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசிக்கொண்டு வந்ததாகவும் அப்போது தான் சொல்லிய விவரங்கள் அனைத்தையும் மணவிழா மேடையில் முந்திக்கொண்டு பேசிவிட்டார் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், முந்திரிக்கொட்டையை போல் அமைச்சர் நேரு எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள நினைப்பார் என்றும் அந்தளவுக்கு அவரது ஸ்பீடு எனவும் கூறி வஞ்சப் புகழ்ச்சி அணி பாடினார். புகழ்வது போல் பேசி குட்டும் வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு காரணம் அண்மையில் சேலம் இளைஞரணி மாநாட்டுத் திடலில் யார் இருக்கிறார்கள், இல்லை என்பதை எல்லாம் பார்க்காமல் பொதுவெளியில் வைத்து அமைச்சர் நேரு அங்கிருந்த ஊழியரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி திமுக தலைமைக்கு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று அமைச்சர் நேருவை முந்திரிக்கொட்டை போல் எனக் கூறி சூசகமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே திமுகவில் உள்ள சார்பு அணிகளிலேயே சிறந்த அணி எதுவென்றால் அது இளைஞரணி தான் என்றும் இது யதார்த்த நிலை என்பதால் யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என தாம் சொல்லியது போல் சித்தரித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப்பிலேயே இந்த பொய் தகவலை பரப்பியதற்காக தாம் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications