எங்களுக்கு வாரிசு இருக்கிறது! அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம்! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;

ஈடு இணை கிடையாது
நன்றியுரையாற்றுகிற போது சுந்தர் சொன்னார், பல்வேறு சிரமங்களுக்கிடையிலே, பணிச்சுமைக்களுக்கிடையிலே நான் வந்திருப்பதாக. ஒரு தூய கழக செயல்வீரருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சிக்கு வருகின்ற போது, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆடம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்கின்ற உணர்வோடு, நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

லட்சக்கணக்கான சுந்தர்கள்
ஒரு சுந்தர் அல்ல. லட்சக்கணக்கான சுந்தர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால்தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது. 1989-ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டுதான் நானும் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த வகையில் சுந்தர் என்னுடைய Batchmate என்று பெருமையோடு சொல்லலாம்.

பாழாகிப்போன நிதி நிலைமை
அதுவும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதி நிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

எங்களுக்கு வாரிசு
இங்கே மணக் கோலத்தில் வீற்றிருக்கக்கூடிய வெற்றிச்செல்வன் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, தற்போது சாலவாக்கம் பகுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுகூட வாரிசு, வாரிசு என்று சொல்வார்கள், எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதை கம்பீரமாக வாரிசு என்று நாங்கள் சொல்கிறோம். அதுதான் குடும்பப் பாச உணர்வு. இதைத்தான் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
-
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு











Click it and Unblock the Notifications