எங்களுக்கு வாரிசு இருக்கிறது! அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம்! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;
பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
ஈடு இணை கிடையாது
நன்றியுரையாற்றுகிற போது சுந்தர் சொன்னார், பல்வேறு சிரமங்களுக்கிடையிலே, பணிச்சுமைக்களுக்கிடையிலே நான் வந்திருப்பதாக. ஒரு தூய கழக செயல்வீரருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சிக்கு வருகின்ற போது, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆடம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்கின்ற உணர்வோடு, நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
லட்சக்கணக்கான சுந்தர்கள்
ஒரு சுந்தர் அல்ல. லட்சக்கணக்கான சுந்தர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால்தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது. 1989-ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டுதான் நானும் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த வகையில் சுந்தர் என்னுடைய Batchmate என்று பெருமையோடு சொல்லலாம்.
பாழாகிப்போன நிதி நிலைமை
அதுவும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதி நிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
எங்களுக்கு வாரிசு
இங்கே மணக் கோலத்தில் வீற்றிருக்கக்கூடிய வெற்றிச்செல்வன் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, தற்போது சாலவாக்கம் பகுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுகூட வாரிசு, வாரிசு என்று சொல்வார்கள், எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதை கம்பீரமாக வாரிசு என்று நாங்கள் சொல்கிறோம். அதுதான் குடும்பப் பாச உணர்வு. இதைத்தான் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.