Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியை "பணிய" வைக்க ஸ்டாலின் போடும் கணக்கு: சபாநாயகர் அஸ்திரத்தை வைத்து ஓபிஎஸ்ஸை வளைக்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக, ஓபிஎஸ்ஸுக்கு திமுக கூட்டணியில் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது... அப்படி பதவி தந்தால், அதனால் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? அரசியல் களத்தில் ஏற்படும் அதிர்வலைகள், தாக்கங்கள் என்னென்ன?

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தனி அமைப்பை நடத்தி வரும் ஓபிஎஸ் வரவிருக்கும் தேர்தல் சூழலை கருத்தில் கொண்டு திமுக மேலிடத்துடன் இணக்கமாகி விட்டார்..

Stalin Masterstroke

இதையடுத்து திமுக தரப்பில் சில முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இந்த தகவல்கள் அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு எட்டியுள்ள நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

ஒருவேளை திமுகவின் பிளான்கள் நிறைவேறி, ஓபிஎஸ் சபாநாயகராக பொறுப்பேற்றால், அது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான மாற்றமாக அமையும் என்றே தெரிகிறது..

ஓபிஎஸ் சபாநாயகராக உட்காருவது திமுகவிற்கு அரசியல் ரீதியாக சில பலன்களை தரக்கூடும்... குறிப்பாக, அதிமுகவின் வலுவான தலைவராக நீண்ட காலம் இருந்த ஒருவரை சபாநாயகர் நாற்காலியில் அமர்த்துவதன் மூலம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தார்மீக ரீதியாக பலவீனப்படுத்த முடியும் என்று திமுக தலைமை கணக்கு போடுவதாக தெரிகிறது.

சபாநாயகர் பதவி

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகர் பதவி என்பது மிகவும் முக்கியமானது.. அனுபவம் வாய்ந்த ஒருவரை அந்த இடத்திற்கு கொண்டு வருவது அவையை சுமூகமாக நடத்த உதவும் என்று கருதலாம். மேலும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களுக்கு இது ஒரு அரசியல் அங்கீகாரமாகவும், திமுகவுடனான உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும்.

ஆனால் இதில் சில சங்கடங்களும் நிறைந்துள்ளன.. சபாநாயகர் பதவி என்பது நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஒரு பொறுப்பு. ஓபிஎஸ் போன்ற தீவிர அரசியல் பின்னணி கொண்ட ஒருவர் அந்த பதவிக்கு வரும்போது, அவரது முடிவுகள் நடுநிலையோடு இருக்குமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது... இது கண்டிப்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு வழிவகுக்கும்.

எடப்பாடிக்கு பின்னடைவு

அதேபோல், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும். தங்களது முன்னாள் கட்சியின் முக்கிய தலைவர், தங்களுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சியுடன் இணைந்து சபாநாயகர் நாற்காலியில் உட்காருவதை அவர்களால் எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

எடப்படி பழனிசாமியை பொறுத்தவரை, சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகராக இருக்கும்போது, அவர் முன் மரியாதை செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.. இது அதிமுகவிற்குள் இருக்கும் கசப்பான சூழலை மேலும் அதிகப்படுத்தும்.

அரசியல் ஆதாயம்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஓபிஎஸ் சபாநாயகராக பொறுப்பேற்பது திமுகவிற்கு அரசியல் ஆதாயத்தை தந்தாலும், அது எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது... உண்மையிலேயே ஓபிஎஸ்ஸுக்கு சபாநாயகர் போஸ்ட்டிங் வரப்போகிறதா? உறுதியாக தெரியவில்லை.. இது குறித்து திமுக அல்லது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+