நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. மதிமுக & அமமுக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக மற்றும் மதிமுக கட்சிகளுக்குச் சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியுடன் களமிறங்கும் நிலையில், அதிமுக, பாஜக பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தலில் களமிறங்குகின்றன.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு செய்வதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக மற்றும் மதிமுக கட்சிகளுக்கு சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னமும் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது












Click it and Unblock the Notifications