நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. மாநில தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஆங்காங்கே சிறுசிறு பூசல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.
சிறு பூசல்கள் நடந்த சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் சமயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் காணொலி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்,












Click it and Unblock the Notifications