Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை உலுக்கிய கொடுங்கையூர் லாக்அப் மரணம் - களத்தில் இறங்கிய மாநில மனித உரிமை ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருக்கிறது.

Recommended Video

    ராஜசேகரன் அக்யூஸ்ட் ஆனதுக்கு காரணமே போலீஸ்தான்! புகார் சொல்லும் உறவினர்கள்!

    திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் ராஜசேகர். கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக கடந்த 11 ஆம் தேதி இரவு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    நேற்று மாலை திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.

    கைதி மரணம்

    கைதி மரணம்

    ஆனால், கைதி ராஜசேகரின் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    பல வழக்குகள்

    பல வழக்குகள்

    உயிரிழந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகள், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகள், எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகள், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் என 23 வழக்குகள் உள்ளன.

    போலீசார் பணியிடை நீக்கம்

    போலீசார் பணியிடை நீக்கம்

    ராஜசேகர் லாக் அப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    மாநில மனித உரிமை ஆணையம்

    மாநில மனித உரிமை ஆணையம்

    இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் லெட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொடுங்கையூர் கைதி ராஜசேகர் லாக் அப் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. 4 வாரங்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+