தோழன் இறந்த சோகம்.. அதே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பன்!
சென்னை: நண்பன் இறந்த சோகம் தாளாமல், அதே தேதியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் இன்று நடந்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதான சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், தன்னுடைய உயிர்தோழன் இறப்பைத் தாங்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுரேஷ் முதலாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் உதயகுமார் என்ற மாணவரும் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர்கள் இருவரும் 11ம் வகுப்பிலிருந்தே நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஒன்றாகவே படித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ம் தேதி உதயகுமார் உயிரிழந்தார். நண்பனின் இழப்பை சுரேஷால் தாங்க முடியவில்லை. உதயகுமார் இறந்தபோதே தானும் இறந்து விடுவதாக கதறி அழுதிருக்கிறார். சுரேஷை அவரது பெற்றோர்கள் தேற்றி கண்காணித்து வந்துள்ளனர். இந்த சோகத்தில் சுரேஷ் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் நண்பன் உதயகுமார் இறந்துபோன 5-ம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை வாங்கிவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதை சுரேஷின் பெற்றோர்கள் தடுத்திருக்கிறார்கள். சுரேஷின் பெற்றோர்கள் அவரைக் கண்டித்து இனியும் இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சுரேஷ், அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள், சுரேஷை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுரேஷ் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழகிய நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுரேஷ் ஜனவரி 5ம் தேதியான இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications