தோழன் இறந்த சோகம்.. அதே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பன்!
சென்னை: நண்பன் இறந்த சோகம் தாளாமல், அதே தேதியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் இன்று நடந்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதான சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், தன்னுடைய உயிர்தோழன் இறப்பைத் தாங்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுரேஷ் முதலாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் உதயகுமார் என்ற மாணவரும் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர்கள் இருவரும் 11ம் வகுப்பிலிருந்தே நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஒன்றாகவே படித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ம் தேதி உதயகுமார் உயிரிழந்தார். நண்பனின் இழப்பை சுரேஷால் தாங்க முடியவில்லை. உதயகுமார் இறந்தபோதே தானும் இறந்து விடுவதாக கதறி அழுதிருக்கிறார். சுரேஷை அவரது பெற்றோர்கள் தேற்றி கண்காணித்து வந்துள்ளனர். இந்த சோகத்தில் சுரேஷ் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் நண்பன் உதயகுமார் இறந்துபோன 5-ம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை வாங்கிவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதை சுரேஷின் பெற்றோர்கள் தடுத்திருக்கிறார்கள். சுரேஷின் பெற்றோர்கள் அவரைக் கண்டித்து இனியும் இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சுரேஷ், அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள், சுரேஷை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுரேஷ் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழகிய நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுரேஷ் ஜனவரி 5ம் தேதியான இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications