சர்ச்சை! பிலிம் இன்ஸ்டிடியூட் லெக்சரர் பணிக்கு இந்தி, சமஸ்கிருத பட்டம் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். 2016- 2017 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்த ஃபிலிம் இன்ஸ்டிடியூட், திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிய பெருமை கொண்டது.
இந்நிலையில், எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு நேர்காணல் அழைப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை காட்சிக்கலை (B.A Visual Arts) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக, காட்சிக்கலையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2023
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?
இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். pic.twitter.com/wyPls5lXJD
இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications