சர்ச்சை! பிலிம் இன்ஸ்டிடியூட் லெக்சரர் பணிக்கு இந்தி, சமஸ்கிருத பட்டம் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். 2016- 2017 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்த ஃபிலிம் இன்ஸ்டிடியூட், திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிய பெருமை கொண்டது.
இந்நிலையில், எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு நேர்காணல் அழைப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை காட்சிக்கலை (B.A Visual Arts) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக, காட்சிக்கலையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2023
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?
இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். pic.twitter.com/wyPls5lXJD
இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications