Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இட்லி,தோசை சுட வரல..” அண்ணாமலை ஸ்டைலில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

"தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அதை திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடிக்கொண்டனர். இதற்கு தடை விதிக்க பலர் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம்

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம்

இதனை அடுத்து கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் 8 கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சு.வெங்கடேசன் கண்டனம்

சு.வெங்கடேசன் கண்டனம்

இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இட்லி தோசை சுட வரல

இட்லி தோசை சுட வரல

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட ஒப்புதல் மறுப்பு. திரும்பி அனுப்பினார் ஆளுநர். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+