“இட்லி,தோசை சுட வரல..” அண்ணாமலை ஸ்டைலில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
"தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?"
சென்னை: தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அதை திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடிக்கொண்டனர். இதற்கு தடை விதிக்க பலர் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம்
இதனை அடுத்து கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் 8 கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சு.வெங்கடேசன் கண்டனம்
இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இட்லி தோசை சுட வரல
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட ஒப்புதல் மறுப்பு. திரும்பி அனுப்பினார் ஆளுநர். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications