சென்னை பீச் - தாம்பரம் ரூட்.. மின்சார ரயிலில் டிராவல் பண்றீங்களா.. உடனே இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், கடற்கரை - செங்கல்பட்டு வரையிலும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்று சொல்லலாம். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையினை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். பீக் நேரங்களில் ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டால் கூட சென்னையே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு இந்த ரயில் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் தான் பராமரிப்பு பணிகள் கூட பெரும்பாலும் விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. அரக்கோணம், வேளச்சேரி ஆகிய ரூட்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரூட் தான் எப்போதும் படு பிசியாக காணப்படும் வழித்தடமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை டூ எழும்பூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரையிலான மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை சென்னை கடற்கரை டூ கூடுவாஞ்சேரில் செல்லும் ரயில் சேவைகள் பகுதியாகவும், சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* இன்று 15 ஆம் தேதி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 03:50, 4.15, 4.35 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரைக்கு பதிலாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும்.
* இன்று 15 ஆம் தேதி மற்றும் நாளை 16 ஆம் தேதி செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து இரவு 10.10, 11.00 மணிக்கு புறப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* இன்று 15 ஆம் தேதி மற்றும் நாளை 16 ஆம் தேதி சென்னை கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரைக்கு இரவு 10.40, 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
* நாளை 16 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 5.50 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications