ரத்த ஆறு ஓடும்னு வீரவசனம் பேசினாங்களே.. ஒரு பூனை குட்டி கூட வரலையே.. திமுக மீது சு.சுவாமி அட்டாக்
ரத்த ஆறு ஓடும் என வீரமாக பேசினார்கள், ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியில் வரவில்லை- சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: ரத்த ஆறு ஓடும் என வீரமாக பேசினார்கள், ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியில் வரவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சொந்த கட்சியையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிப்பார். தமிழக பாஜக, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
சொந்த கட்சியை தூற்றும் சுப்பிரமணியன் சுவாமி சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை பாராட்டும்படி பேசுவார். அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட தமிழக பாஜக தனித்து போட்டியிடாவிட்டால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என கடும் சொற்களால் வசைபாடியிருந்தார்.

பாஜக தனித்து போட்டி
அது போல் இரு தினங்களுக்கு முன்பும், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். அப்போது கிடைக்கும் வெற்றி வாய்ப்புகளை வைத்துதான் பாஜக வளர்ந்ததாக அர்த்தம். அது வரை தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்ல கூடாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அவர் கூறுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பங்கு என்ன என கேட்கிறீர்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜக ஏதும் செய்யவில்லை. நான் ஏதாவது சொன்னால் கட்சிக்குள் தலையிடுகிறார் என சொல்வார்கள். நானும் பாஜகவில்தான் உள்ளேன். ஆனால் தமிழக பாஜக மட்டும் இல்லை. தேசிய பாஜகவில் உள்ளேன்.

பாஜக எப்படி இருக்கிறது
மற்ற மாநிலங்களில் பாஜக எப்படி இருக்கிறது தெரியுமா, ஆனால் தமிழகத்தில் பாஜக துடிப்புடன் இல்லை. தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியிலிருந்து பத்திரிகைகள், அறிக்கைகள் வாயிலாக தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் செய்தால் எப்படி தமிழகத்தில் பாஜக வளரும்? வளரவே வளராது.

பாஜக வளர வேண்டும்
தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும். திமுகவுக்கு கொள்கை கிடையாது. நாட்டை பிரிப்பது குறித்து பேசிய படியே இருப்பார்கள். ஆனால் தேர்தலின் போது மட்டும் வேறு விதமாக பேசுவார்கள். என் முயற்சியால் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்கெனவே நீக்கப்பட்டது. அப்போது ரத்த ஆறு ஓடும் என்று வீரமாக பேசினார்கள். ஆனால் ஒரு பூனைகுட்டி கூட வெளியே வரவிவில்லை. அதனால் திமுக குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை.

நாட்டை பிரிக்க
அது ஒரு கட்சியோ இயக்கமோ இல்லை. நாட்டை பிரிப்பதற்காக அதை தொடங்கினார்கள். தற்போது ஊழலோ ஊழல் அந்த கட்சி. கோயில் விவகாரத்தில் அநாகரிகமாக நடந்தால் நான் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இது தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தமிழகத்தில் இருக்கும் கோயில் பூசாரிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் தொல்லை கொடுக்கிறார்கள். கோயில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி கஷ்டம் கொடுக்கிறார்கள். கோயில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி சிலர் கஷ்டம் கொடுக்கிறார்கள். நாட்டில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். அதனால் இந்துக்களை இவர்கள் யாரும் எதுவும் செய்து விட முடியாது. இவ்வாரு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications