ஈபிஎஸ்க்கு கிரீன் சிக்னல்.. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும்..செல்லூர் ராஜூ உற்சாகம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வலுவாக வழிநடத்தி வருகிறார். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும் என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பொதுக்குழு செல்லும் என்று உச்ச நிதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்படி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வலுவாக வழிநடத்தி வருகிறார். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. இந்த வெற்றி தொடர் வெற்றியாக அமையும். பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு குறித்து எப்போது இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, போய்விட்டு சொல்கிறேன் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications