அக்டோபரில் விடுதலையாகிறார் சுதாகரன்...? நிம்மதி பெருமூச்சு விடும் மன்னார்குடி உறவுகள்..!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் அடுத்த மாதம் இறுதியில் விடுதலையாவார் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி சசிகலாவும், இளவரசியும் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

அவர்களுடன் சிறை தண்டனை அனுபவித்த சுதாகரனுக்கு தண்டனைக் காலத்துடன் சேர்த்து ரூ.10 கோடியே ரூ.10,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை சுதாகரனால் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் அவரால் விடுதலையாக முடியவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஓராண்டு தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார். இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்ற போது ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் போட்டிருந்தது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் மற்றொரு வழக்கு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் சுதாகரன் இருந்தது தெரிவிக்கப்பட்டது.
சுதாகரன் தரப்பில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், பாளையங்கோட்டை சிறையில் சுதாகரன் அனுபவித்த தண்டனை காலத்தின் விவரத்தை தாக்கல் செய்ததோடு கூடுதலாக இப்போது அனுபவித்து வரும் ஓராண்டு தண்டனைக் காலத்தை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுதாகரன் அனுபவித்து வரும் கூடுதலான ஓராண்டு தண்டனைக் காலத்தில் 89 நாட்களை குறைத்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் இறுதியில் அவர் சுதந்திர பறவையாக சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவுள்ளது.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றதன் விளைவாக தான் 96-ல் ஆட்சியையே பறிகொடுத்தது அதிமுக. இதனிடையே அக்காள் மகனான சுதாகரனை சிறையிலிருந்து மீட்க முடியவில்லையே என்ற வருத்தம் சசிகலாவுக்கு இருக்கச் செய்தது.
ரூ.10 கோடியை சுதாகரனுக்காக அபராதம் செலுத்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பில் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக சுதாகரன் விடுதலையாகிறார் என்ற செய்தி மன்னார்குடி உறவுகளை குறிப்பாக சசிகலாவை நிம்மதி அடைய வைத்துள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரர் சுதாகரன் என்பது கவனிக்கத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications