எப்படியாவது குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன்.. விஜயகாந்த் வேதனை
சென்னை: சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தை சுர்ஜித் இறந்த நிலையில், சடலமாக மீட்டெடுக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் துயரமுற்றேன். எப்படியாவது குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன். இறைவனை வேண்டினேன். உலகமே குழந்தை சுர்ஜித்தை மீட்க பிரார்த்தனை செய்தது

ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் இத்தகைய துயர செய்தி நம் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை சுர்ஜித்தை மீட்க பாடுபட்ட அனைவரின் முயற்சிகளும் பாராட்டத்தக்கது இருப்பினும் குழந்தை சுர்ஜித் உயிருடன் மீட்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது.
இத்துயரச் சம்பவத்தை பாடமாக கொண்டு மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உடனடியாக, திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட வேண்டும். சுர்ஜித்தை இழந்துவாடும் அவரது பெற்றோர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தை சுஜித் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதனிடையே விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.எனவே திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் அல்லது ஆழ்துளைகளை மூடும் 'கேப்' கொண்டு மூட வேண்டும்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications