கோடை காலத்தில் இப்படி ஒரு சிக்கலா.. தவிக்கும் ரயில்வே? மூக்கை பிடிக்கும் பயணிகள்.. என்னதான் ஆச்சு
சென்னை: கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரத்தில் கோடை காலம் என்பதால் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இண்டெர்சிட்டி மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெயிலின் தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் சொந்த ஊர்களுக்கும், மலைவாசஸ்தலங்களுக்கும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை நாட்களில் எந்த அளவு கூட்டம் அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு தற்போது தினசரி கூட்டம் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் ரயிலில் அலைமோதுகிறது.

மக்கள் கடும் பாடுபட்டு டிக்கெட்டுகளை எடுத்து செல்லும் நிலையில், ரயிலில் தற்போது வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளதாம். அதாவது, கோடை காலம் என்பதால் தண்ணீர் கிடைக்காமல் ரயில்கள் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் கிளம்பி செல்கின்றன.
இந்த தொலைதூரங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் தற்போது தண்ணீர் முழுமையான அளவு நிரப்பப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், தனியார் தண்ணீர் லாரிகள் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தேவையை சமாளிக்க முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறுகிறதாம்.
வார நாட்களில் 50 சதவிகிதம், வார இறுதி நாட்களில் 75 சதவிகிதமும் தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் தற்போது 25 சதவீதம் தான் தண்ணீர் நிரப்பப்படுகிறதாம். இதனால், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீர் காலியாகிவிடுதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை இருக்கிறது. சில நேரங்களில் கழிவறைகளில் தண்ணீர் காலியாகிவிடுவதால் தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறதாம்..
கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால், நாற்றம் அடிப்பதால் தொலை தூர பயணிகள் கடும் சிரமத்துடன் பயணிக்கிறார்கள். இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, "இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஒரு சில நீண்ட தூர ரயில்களுக்கு வேறு ரயில் நிலையங்களில் நீர் நிரப்பி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரயில் பெட்டிகளை கழுவுதல் சுத்தபடுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரயிலின் வெளிப்புறமும் சுத்தம் செய்ய தண்ணீர் கொடுப்பது இல்லையாம். ஒரு ரயில் தொலை தூரம் சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
-
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications