Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாண்டுகளுக்கு குட் நியூஸ்..பெற்றோர் பாடு திண்டாட்டம்.! மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் கோடை விடுமுறையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில், கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் காரணமாக மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் எனவும், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை இருப்பதால் சுமார் ஒன்றரை மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.

Summer holidays for schools in Tamil Nadu likely to be extended

இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதனால் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இன்னும் விடுமுறை அளிக்கப்படவில்லை.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை காரணமாக நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மட்டும் அடுத்த வாரத்திலிருந்து கோடை விடுமுறையானது தொடங்குகிறது.

எப்போது தொடக்கம்?: மேலும் தேர்தல் காரணமாக பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாகவும் சில பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்ட நிலையில் இந்த மாதத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வரும் நிலையில் அதற்குப் பிறகு கோடை விடுமுறை தொடங்குகிறது.

பள்ளிகள் திறப்பு: பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4-ம் தேதி எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் முதல் வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த வருடம் சுமார் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

தேர்தல் பணி: மேலும் விடைத்தாள் திருத்துவது தேர்தல் பணி உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்பதால் ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து தொடங்கும் கோடை விடுமுறை ஜூன் இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் திட்டம்: கடந்தாண்டு கடும் வெயில் காரணமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறையானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கோடை வெயிலின் பாதிப்பு மிக தீவிரமாக இருக்கும் நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்கும் என்பதால் தற்போதிலிருந்து சுற்றுலாவுக்கான பிளான்களை பெற்றோர்களும் மாணவர்களும் போட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோடையில் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்பவும் பெற்றோர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+