Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசுக்கு சபாஷ்.. ஆரம்பித்தே வெறும் ஐந்து நாட்கள் தான் ஆகுது.. அசரடித்த அரசு பள்ளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 5 லட்சம் மாணவ மாணவியரை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது..

பணக்காரர்களுக்கு சிபிஎஸ்இ கல்வி, நடுத்தர வர்க்கத்திற்கு மெட்ரிகுலேசன் கல்வி, ஏழைகளுக்கு அரசு பள்ளியில் கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ கல்வி தான் உயர்ந்த கல்வி என்ற மாயை இங்கு அதிகமாக உள்ளது. அதுவே இதற்கு காரணம்.. அதேநேரம் மெட்ரிகுலேசன் கல்வியும், அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியும் ஒன்று தான்..

Super Achievement in Admission in Government Schools Praise for Tamil Nadu Govt

ஆங்கிலம் அல்லது தமிழில் எதில் வேண்டுமானாலும் படிக்க முடியும்.. எனினும் கல்வி முறையில் பெரிய மாறுபாடுகள் இல்லை. ஆனாலும் ஏழைகள் தான் படிக்கும் இடமாக அரசு பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பல பெற்றோர் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக அரசு பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது.

நடுத்தர வர்க்கத்தினரே பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், விளையாடுவதற்கான கட்டமைப்புகள், நல்ல பயிற்சி, இலவச பாட புத்தகங்கள், கல்வி கட்டணம் இல்லை.. படிக்க வந்தால் மாதம் 1000 பணம் என அரசு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. ஏழைகள் எப்படியாவது கல்வி பெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அரசு அவர்களுக்கான வசதிகளை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசு பள்ளிகள் செயல்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்" கொண்டுவரப்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். கல்வி கற்பிக்கும் 80 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் வழக்கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந் தவகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த மார்ச் 1-ந்தேதி முதல்அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தவிர, அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+