தமிழக அரசுக்கு சபாஷ்.. ஆரம்பித்தே வெறும் ஐந்து நாட்கள் தான் ஆகுது.. அசரடித்த அரசு பள்ளிகள்
சென்னை: கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 5 லட்சம் மாணவ மாணவியரை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது..
பணக்காரர்களுக்கு சிபிஎஸ்இ கல்வி, நடுத்தர வர்க்கத்திற்கு மெட்ரிகுலேசன் கல்வி, ஏழைகளுக்கு அரசு பள்ளியில் கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ கல்வி தான் உயர்ந்த கல்வி என்ற மாயை இங்கு அதிகமாக உள்ளது. அதுவே இதற்கு காரணம்.. அதேநேரம் மெட்ரிகுலேசன் கல்வியும், அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியும் ஒன்று தான்..

ஆங்கிலம் அல்லது தமிழில் எதில் வேண்டுமானாலும் படிக்க முடியும்.. எனினும் கல்வி முறையில் பெரிய மாறுபாடுகள் இல்லை. ஆனாலும் ஏழைகள் தான் படிக்கும் இடமாக அரசு பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பல பெற்றோர் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக அரசு பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது.
நடுத்தர வர்க்கத்தினரே பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், விளையாடுவதற்கான கட்டமைப்புகள், நல்ல பயிற்சி, இலவச பாட புத்தகங்கள், கல்வி கட்டணம் இல்லை.. படிக்க வந்தால் மாதம் 1000 பணம் என அரசு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. ஏழைகள் எப்படியாவது கல்வி பெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அரசு அவர்களுக்கான வசதிகளை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசு பள்ளிகள் செயல்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்" கொண்டுவரப்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். கல்வி கற்பிக்கும் 80 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் வழக்கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந் தவகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த மார்ச் 1-ந்தேதி முதல்அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தவிர, அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications