அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு அடுத்த அதிரடி.. செம குஷியான வரவேற்பு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: அரசு ஊழியர்களுக்கு எத்தனையோ அதிரடிகளை அறிவித்து வரும் தமிழக அரசு, தற்போது மேலும் ஒரு குட்நியூஸ் தெரிவித்துள்ளது..!
கடந்த 2 வருட காலமாகவே தொற்று தமிழகத்தை தாக்கி வந்து கொண்டிருக்கிறது.. தொற்று எண்ணிக்கையை குறைக்க முடிகிறதே தவிர, ஒரேயடியாக கொரோனாவை ஒழிக்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் சரி, அதன் தாக்கம் குறைவாக இருந்தபோதிலும் சரி, தமிழக அரசின் தீவிர நடவடிக்கை ஒரே மாதிரியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனாவைரஸ்
தொற்றை ஒழிக்க எத்தனையோ நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.. அறிவுறுத்தியும் வருகிறது.. விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.. அரசின் இத்தனை செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது அரசு ஊழியர்கள்தான்.. இன்றுவரை பல தடைகள் ஏற்பட்டாலும், தங்கள் பணிகளை அவர்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்..

ஊழியர்கள்
அதற்காகத்தான், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சையையும் சேர்த்து அரசாணையை அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்தது.. ஒரு குடும்பத்துக்கு ஓர் அட்டையென அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை செலவை ஏற்று வந்த நிலையில், கொரோனா பேரிடரின்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்ததையடுத்து, அரசு ஊழியர்களின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.

விடுப்பு எப்படி?
இந்நிலையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. காரைக்குடியை சேர்ந்த சி.செந்தில்குமரன் என்பவர், அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி மனு அனுப்பி இருந்தார்... அந்த மனுவுக்கு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தற்போது பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசு அதிரடி
அதில், "ஒரு அரசு ஊழியர் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறையாக அனுமதிக்கப்படும். மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து, தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த உத்தரவானது, அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
-
ஜாலி டூருக்கு குடும்பத்தோடு கிளம்பும் அரசு ஊழியர்கள்.. ஆனால் ஒரு விநோத உத்தரவு.. அது என்ன தெரியுமா? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications