சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணனுமா? அப்ப இந்த கார்டு வேணும்.. சார் பதிவாளர் அலுவலகத்தில் புது ரூல்ஸ்
சென்னை: பத்திரப்பதிவின்போது, சம்பந்தமேயில்லாத நபர்களை, சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு நடைமுறையில் உள்ளது.. ஆனாலும், வெளியாட்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து விடுகிறார்களாம்.. இதனால் சில சிக்கல்களும் எழுந்தவாறே உள்ளது. அதனால்தான், இவைகளை தடுத்து நிறுத்த புதிய அதிரடியை பதிவுத்துறை கொண்டு வரப்போகிறதாம். அதுகுறித்த தகவல்தான் தற்போது கசிந்துள்ளது.
தமிழகத்தில், 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் வரிசையில் இருப்பவரை எப்படியாவது முந்திச்சென்று, பத்திரப்பதிவு நடைபெறுவது தொடர்கதையாக நடந்து வந்தது..

அதனால்தான், இதனை தவிர்ப்பதற்காகவே, பர்ஸ்ட்-இன் பர்ஸ்ட்-அவுட் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது.. இதன்மூலம் முதலில் வருபவர் என்ற முறையிலேயே பதிவு செய்யப்படும்.
பத்திரப்பதிவு - டோக்கன்
அதன்படி, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் குறித்த விவரங்களை, ஆன்லைன் முறையில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதற்கான டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
இது ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .. அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒருவருக்கு காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர் தவறவிட்டிருந்தால், மாலை நேரத்தில் தான் பதிவு செய்ய முடியும். அதேபோல் மாலையில் நேரம் ஒதுக்கப்பட்ட பதிவுகளுக்கு, அதற்கு முன்னதாக பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. அதுமட்டுமல்ல, டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றால் போதும்.
ஆன்லைன் டோக்கன் சிஸ்டம்
இந்த ஆன்லைன் டோக்கன் நடைமுறையானது, பொதுமக்களுக்கு சிரமத்தை குறைத்திருந்தது.. இதனால், நாள் கணக்கில் சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலைமையும் மாறியது..
ஆனால், சமீபநாட்களாகவே, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, வேறு நபர்களும் உள்ளே செல்வதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. அதுமட்டுமல்ல, சில இடங்களில், சார் - பதிவாளர்களை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து வெளியாட்கள் தாக்கியதாகவும் புகார்கள் வெளியாகின. இதனால், பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று சார் - பதிவாளர்கள் முறையிட்டனர்.
பதிவுத்துறை அதிரடி உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில்தான், பத்திரப்பதிவின் போது, சம்பந்தம் இல்லாத நபர்கள் அலுவலகத்துக்குள் வருவதை முழுமையாக தடை செய்ய, பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறதாம்..
அதாவது, சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம், மாதிரி அலுவலகமாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், சொத்து வாங்குவோர் உள்ளே செல்ல, "அனுமதி அட்டை" வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சொத்து வாங்குவோர் தங்களுக்கான டோக்கன் விபரங்களை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டினால், அவர் ஒரு கார்டு கொடுப்பார். அதை காட்டினால் மட்டுமே, சார் - பதிவாளர் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கான கதவு திறக்கும்.
மக்கள் மத்தியில் இந்த சிஸ்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் இதுபோலவே விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க முடிவாகியிருப்பதாகவும், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் சார் பதிவாளர் தரப்பில் கூறப்படுகிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications