40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தங்களது கட்சியின் ஆதரவை தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார். முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலின் முன் வைத்துள்ளோம் என்றும், சிறையில் உள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி பிரச்சாரம் செய்யும் எனவும் தெரிவித்தார்.
[குமரியில் களமிறங்கும் வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்! ]
இதற்கிடையே, திமுகவுக்கு ஆதரவாக வரும் 26 -ம் தேதி முதல் ஏப்ரல் 16 -ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் திமுக-வில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications