உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. சூர்யகாந்தை நியமிக்க பரிந்துரை.. யார் இவர்? பின்னணி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமனம் செய்ய, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த் யார்? என்பது குறித்த விவரங்களையும் அவர் விசாரித்த முக்கியமான வழக்குகள் என்னவெல்லாம் என்பது பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய், அடுத்த மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், நாட்டின் 53வது புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் வேகம் எடுத்துள்ளது. புதிய தலைமை நீதிபதியை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பரிந்துரை செய்வது வழக்கம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
இதன்படி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு தலைமை நீதிபதி பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது மிக மூத்த நீதிபதியான சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைத்துள்ளார்.
யார் இவர்?
சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்பார். இவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிவரை உள்ளது. நீதிபதி சூர்யகாந்த், 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் பிறந்தார்.
எளிய பின்னணியை கொண்ட சூர்யகாந்த் 1981ஆம் ஆண்டு முதுகலை பட்டம் முடித்தார். அதன்பிறகு ரோஹ்தக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். கடந்த 1985ஆம் ஆண்டு சண்டிகருக்கு குடிபெயர்ந்த சூர்யகாந்த், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அரசியலமைப்பு, சிவில் வழக்குகளில் வாதாடுவதில் திறன் பெற்றவர் என்று பெயர் பெற்ற சூர்யகாந்த், 2008ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு, இமாசல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற முறையில், காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து, பேச்சு சுதந்திரம், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்த உத்தரவு குறித்து குடியரசுத்தலைவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications