சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
சென்னை: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மற்றும் முலாயம் சிங் யாதவுக்கு எதிரான வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிபிஐ தனது முழு தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் அவரது மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் முலாயம் சிங்கின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ், ஆகியோர் மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2005ஆம் ஆண்டு விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐக்கு நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
2007 ஆம் ஆண்டு வழக்கு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வழக்கின் விவரம் என்ன ஆனது? இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முழு தகவலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
2007 மார்ச் 1ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை வழக்கின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். ஊழல் சொத்தின் மதிப்பு ரூ.2.63 கோடி என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications