ஒரு ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்.. லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் அதிரடி வழக்கு
Recommended Video
சென்னை: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2005ம் ஆண்டு ஒரு விழாவில் தொகுப்பாளராக பங்கேற்ற தன்னை, வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய இயக்குநர் சுசி கணேசன் முயன்றார் என கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை குற்றம்சாட்டியிருந்தார்.
Metoo இயக்கத்தின் ஒரு பகுதியாக இவரது குற்றச்சாட்டும் பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக சுசி கணேசன் அதை மறுத்தார்.
[ஸ்ருதி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு.. அர்ஜுன் மாமனார் என்ன சொல்கிறார் தெரியுமா?]
மேலும், சைதாப்பேட்டை குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் முன்னிலையில், லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது 1 ரூபாய், நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.