சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் எப்போது தொடக்கம் தெரியுமா? இதோ வந்தாச்சு தகவல்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரணாய் காக்கும் வகையில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டத்தின் தொடக்க விழா, நாளை சென்னை எழும்பூரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அதிரடிப்படை ஒரே நேரத்தில் களமிறங்க உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். கோட்டையில் பொறுப்பேற்றவுடன் அவர் பல்வேறு முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் முதல் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், போதைப்பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைக்கும் திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய திட்டத்தை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு
இத்தகைய சூழலில் தான், தமிழக முதல்வர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் பிரத்தியேகமாக செயல்படவுள்ள இந்தச் சிங்கப்பெண் சிறப்புப் பிரிவுக்கு ஐஜியாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பொது இடங்களிலும், இணைய வழியிலும் நடக்கும் குற்றங்களைத் தடுத்து, அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி விரைவுப் பாதுகாப்பு வழங்குவதே இப்படையின் முதன்மை நோக்கமாகும்.
அதிலும் குறிப்பாக பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த அதிரடிப்படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்தத் திட்டம் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
நாளை சிங்கப் பெண் திட்டம்
இதற்காக போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டன. ஆனால், முதலமைச்சரின் டெல்லி பயணம் மற்றும் சில தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் அன்றைய தினம் இந்தத் தொடக்க நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, "அடுத்த வாரம் சிங்கப்பெண் அதிரடிப் படைத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி சிங்கப்பெண் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீல நிற சட்டை, காக்கி பேண்ட்
இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடிப்படைக்கான பிரத்தியேக நீல நிறச் சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிறத் தொப்பி மற்றும் காலணிகள் அடங்கிய சீருடைகளும், வாகனங்களும் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவுடன், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை உடனே தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications