Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி அறிக்கை விடுவதற்கு பதில் ஜோசியரை ரகசியமா கேட்கலாமே.. கி வீரமணியை கலாய்த்த எஸ்வி சேகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கி வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை என பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழக கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அண்மையில் உத்தரவிட்டது.

SV.Shekher criticizing K.Veeramani

இந்து அறநிலையத்துறையின் இந்த உத்தரவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கடும் கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு 51-A(h) எதிரானது இது. சட்டத்தை மீறும் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என கி வீரமணி வலியுறுத்தியிருந்தார்.

கி.வீரமணியின் அந்த அறிக்கை இன்று செய்தித்தாள்களில் வெளியானது. இந்நிலையில் அவரது கண்டன அறிக்கைக்கு பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக நாளிதழில் வெளியான கி வீரமணியின் செய்தியை டிவிட்டரில் மேற்கோள் காட்டிய எஸ்வி சேகர், வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை. இந்த வெட்டி அறிக்கை விடுவதற்கு பதில் என்ன செய்யலாம் என்று ரகசியமா சோதிடரை கேட்டா பரிகாரம் சொல்லிடுவாரே என்று கூறி கலாய்த்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+