Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சே நிறையுதே..சென்னை ஐடி செக்டாரில் வேலை பார்க்குறீங்களா? ஊழியர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்..அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் அசத்தல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. இங்கே வேலை செய்யும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த சாலையை 6 வழி சாலையாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ராஜிவ் காந்தி சாலையில் உள்ள பழைய மின் விளக்குகள் நீக்கப்பட்டு புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

chennai ecr omr


மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.

இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ன்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

அரசு ஆதாரங்களின்படி, ஓஆர்ஆர் எனபப்டும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) பணியை மேற்கொள்ள போதுமான நிலம் உள்ளது என்றும் கூறி உள்ளதால் பிரச்சனை இன்றி விரைவில் பணிகள் இங்கே தொடங்கும். இதன் மூலம் இசிஆர் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும். மரக்காணம் முதல் புதுச்சேரி வரை மூன்றாவது பேக்கேஜுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

இந்த பணிகள் முடிந்ததும் இசிஆர் விரிவுபடுத்தும் பணிகள் முடியும். 132 கிமீ நீளம், ஆறு வழி அகலம் கொண்ட CPRR ஆனது, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சித்தூர்-தச்சூர் கூட் சாலையில் ஆந்திராவை அடைய வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+