நம்ம தி நகரா இது? வெறிச்சோடிக் கிடக்கும் ரங்கநாதன் தெரு? பரிதவிக்கும் வியாபாரிகள்!
சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்த திநகர் இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப் போய் உள்ளது.
இந்திய அளவில் மக்கள் அதிகம் அளவு கூடும் சாலைகளின் பட்டியல் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ரங்கநாதன் தெரு. இது தமிழ்நாட்டின் நம்பர் 1 வணிக சந்தையாகத் திகழ்ந்து வருகிறது.

தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் இங்கே தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிரம்பி வழிவார்கள். அந்தளவுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய மையமாக இந்த தி நகர் பெயர் பெற்றுள்ளது
அப்படிப் பட்ட இந்தத் தி நகர்தான் இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் காணப்படுகிறது. அதற்குக் காரணம், சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தை விஜய் சேதுபதியின் '96' திரைப்படத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் பார்த்திருக்கலாம். அந்தக் காட்சி சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
அப்படி த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் நடந்து வந்த பாலத்தைத்தான் இப்போது உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், சைதாப்பேட்டை அண்ணாசாலையிலிருந்து திநகருக்கு உள்ளே நுழையும் சாலையிலிருந்து ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதை அப்படியே இந்தப் பாலத்தில் கொண்டு வந்து இணைக்க உள்ளனர்.

ஆகவேதான் இந்தப் பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாலம் பணிகள் வருங்காலத்தில் மக்களுக்குப் பல வசதிகளைத் தரும். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நாளைய நன்மைக்காக இன்றைக்கு ஆயிரக்கணக்கான திநகர் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய சோகம்.
இதே பகுதியில் செருப்பு தைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கும் 70 வயதுக்கு மேலான பாட்டி, இந்த மேம்பாலப் பணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். அவர் பாஷையில் சொல்வதாக இருந்தால், 'பொழப்பே போச்சு. சாப்பாட்டுக்கே வழியில்ல. வருமான சுத்தமா இல்லை' என்கிறார். அவர் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறி செல்வது கடினம். கண்ணம்மாபேட்டை பக்கமே அவரது வாழ்வாதாரம் உள்ளது.
அரசும் ஒரு ஆண்டு காலத்திற்கு இந்த மேம்பாலப் பணிகள் நடைபெறும் என்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் பாட்டியின் நிலைமை மிகமிக கஷ்டம். இவரைப் போன்று பாதிக்கப்பட்ட அன்றாடம் கூலித் தொழிலாளர்களைக் கண்டறிந்து அரசு ஏதேனும் உதவித்தொகை வழங்க முன்வரலாம். அல்லது அவருக்கு மாற்று ஏற்பாடுகளுக்கு ஏதேனும் வழி உண்டாக்கிக் கொடுக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதே டிநகர் மேம்பாலம் பக்கம் மிக்சி ரிப்பேர் கடை வைத்திருக்கும் ஒருவர், 'ஒரு ஈ காக்காய் பார்க்க முடியல சார். எப்படி ஜேஜே என்று இருந்த டிநர். இப்ப பார்த்தீங்களா? இதுதான் நிலைமை.
ஏற்கெனவே 2 வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். இப்ப மேம்பாலம் கட்டுகிறேன் என்று மொத்த கடைகளையும் மூட வச்சுட்டாங்க. சுத்தமா த்ழொஇலே போச்சு. இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்' என்கிறார்.
'மக்கள் நடமாட்டம் இருந்தா தான் அங்க கடை வைக்க முடியும். மக்களே வராத தெருவுக்குள்ள நாங்க கடைவைத்து என்ன லாபம் சொல்லுங்கள். தண்டல் வாங்கிதான் இந்தத் தொழிலையே செய்து வந்தோம்.

இப்ப தினம் அந்தத் தண்டல் கட்டவே வருமானம் இல்லை. ராத்திரி படுக்கப் போனா, நாளை காலை எப்படிச் சமாளிக்கப் போகிறமோ' என்ற பயத்தோடதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்கிறார் இந்த தி நகரில் சாலையோரமாக சாமி படங்கள், கையில் கட்டக் கூடிய கயிறுகளை விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர்.
இந்த டிநகரில் சாலையோரமாக இதே தொழிலை இவரது தாத்தா செய்துள்ளார். அடுத்த அப்பா அம்மா. இப்போது இவர். ஆக மூன்று தலைமுறையாக இந்த நடைபாதை வியாபாரி இதே தொழிலைத்தான் செய்து வருகிறார். அவரது தொழில் இந்தப் பாலப் பணிகளால் இன்று முடங்கிப் போய் நிற்கிறது.
மாங்காயை வெட்டி பத்தை போட்டு விற்பனை செய்து வரும் தள்ளுவண்டிக்குக்காரர் ஒருவர் கடந்த 4 நாள்களாக வியாபாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என்கிறார். தினம் 100 ரூபாய் கிடைக்குமா எனத் தவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதாகவும் சொல்கிறார்.

இந்தப் பாலம் கட்டும் பணிகளுக்காகப் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுவிட்டன. வழக்கமாக மக்கள் திபுதிபுவென்று குவியும் ரங்கநாதன் சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.
இது நம்ம தி நகர் தானா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது என்றால் பாருங்களேன்.
ஏற்கெனவே தி நகரில் மெட்ரோ அமைப்பதற்காக பனகல் பார்க் முழுக்கவே தோண்டி போட்டு விட்டார்கள். சில ஆண்டுகளாக அந்தப் பணிகளுக்காகச் சாலை போக்குவரத்துகளை மாற்றி விட்டுவிட்டார்கள். அதனால் முன்பே பாதி வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
அடுத்து இப்போது இந்த மேம்பாலத்தால் மிகப்பெரிய சவுளி கடைகள், பாத்திரக் கடைகள் எலெக்ட்ரானிக்ஸ் கடைகள், நகைக்கடைகள் என்று பல தரப்பு வியாபாரமும் முடங்கிப் போய் நிற்கின்றது என்ற கருத்து அத்தனை வியாபாரிகளும் தெரிவிக்கிறார்கள்.

இதே நடைபாதையில் குழந்தைகளுக்காக உடைகளை விற்பனை செய்து வரும் இளைஞர் ஒருவர், 'பாரிஸ் பஸ்டாண்டில் அப்பா வியாபாரம் செய்து வந்தார். அந்த பஸ் ஸ்டாண்டு மூடிய பிறகு நான் தி நகர் வியாபாரம் பண்ண வந்தேன். அப்பா கோயம்பேட்டுக்குப் போனார்.
இப்ப கோயம்பேடு பஸ் ஸ்டாண்டையும் மூடிட்டாங்க. இந்த தி நகரையும் முடக்கிட்டாங்க. எப்படித்தான் பிழைக்கிறதோ? வழிதெரியாமல் தவிக்கிறோம்' என்கிறார்.
அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் வலிக்கிறது.
டதி நகரில் தள்ளுவண்டியில் தர்பூசணியை வெட்டி கப் உள்ளே போட்டு விற்கும் வியாபாரி, 'அரசாங்கத்துக்கு இந்தப் பாலம் தேவையாக இருக்கலாம். எங்களுக்கு என்னவோ இந்தப் புதிய பாலம் தேவை இல்லை என்பதுதான்' என்கிறார்.
இதம் வீட்டுக்கு 1500 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு போன இவர், இன்று 100 ரூபாய்க்கு வழியில்லாமல் தவிக்கிறேன் என்கிறார். அதை அவரது முகமே சொல்லாமல் சொல்கிறது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications