உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியானதும் உதயநிதி முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராகவும் பதவியேற்க பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் ரகசியக் கூட்டணியில் ஈடுபட முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.

aadhav arjuna udhayanidhi stalin

இது குறித்துப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தேர்தல் முடிவுகள் வெளியான அந்த இரவில் நடந்த சில அதிரடித் திருப்பங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் 108 இடங்களில் இருந்தபோது, திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க கையெழுத்து வாங்கியதாகவும், ஆனால் அதன் பின்னணியில் உதயநிதியை முதலமைச்சராக்கி, இபிஎஸ் துணை முதலமைச்சராகும் ரகசியத் திட்டம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அதிகாரப் பகிர்வு மற்றும் ஊழல் திட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் காங்கிரஸ் ஆகியவை கடுமையாக எதிர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

"திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஒரு ஆட்சியை உருவாக்குவது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எச்சரித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தச் சூழ்ச்சியால்தான் கூட்டணிக் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளிக்க முன்வந்ததாக அவர் விளக்கினார். அதிமுகவின் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ள 90 சதவீதத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வரத் தொடங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறினார்.

செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தவெகவிற்கு வரும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் குடும்ப ரீதியான மரியாதையே இதற்கு முக்கியக் காரணம் என்றார். எந்த எம்எல்ஏ-வையும் ஆசை காட்டி இழுக்கும் எண்ணம் தங்கள் தலைமைக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எம்ஜிஆர் எதற்காக திமுகவை எதிர்த்து அதிமுகவை உருவாக்கினாரோ, அந்த லட்சியப் பாதையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் பயணிப்பதாக அவர் பெருமிதம் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் திமுக பக்கம் சாய்ந்ததை விமர்சித்த அவர், அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் இனி தவெகவை மட்டுமே நம்புவார்கள் என்றார். அடுத்த ஒரு மாதத்திற்குள் அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+