தட்டி கொத்தாக தூக்கிய விஜய்.. தவெகவில் இணையும் முக்கிய தலைகள்.. திமுகவிலுருந்தும் தாவும் தலைகள்
சென்னை: அண்மையில் அ.தி.மு.க-விலிருந்து பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இன்று தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் நடிகர் விஜய் முன்னிலையில் இணையவிருக்கின்றனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கட்சியின் அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் முக்கிய நகர்வாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க-வின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வணிக அணி அமைப்பாளர் சி. சுந்தரபாண்டியனும் இணைகிறார்; இவர் உள்ளூர் அமைப்பு, பொருளாதாரப் பரப்புரைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

ஒட்டன்சத்திரம் ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரமும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார். இது இளைஞர் மத்தியில் கட்சியின் ஆர்வத்தைக் காட்டுகிறது. முன்னாள் புதுச்சேரி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராமச்சந்திரனும் கட்சியில் சேர்வது, நிர்வாக அனுபவம், நம்பகத்தன்மை அளிக்கும்.
அ.தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமியும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருக்கிறார். இது, பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்தும் தலைவர்களை ஈர்க்கும் கட்சியின் திறனை எடுத்துக்காட்டுகிறது. இவர்களைத் தொடர்ந்து மேலும் பல தலைவர்களும், நிர்வாகிகளும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுகள் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான பெருகிவரும் ஆதரவையும், அதன் விரைவான அரசியல் வளர்ச்சியையும் பறைசாற்றுகின்றன. இவை, நிறுவப்பட்ட கட்சிகளிலிருந்தும், பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்தும் ஆதரவு பெறும் வலிமையான புதிய சக்தியாக தொலைக்காட்சி வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன.
செங்கோட்டையன் மூவ்
இது போக அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 10 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜன் தவெகவில் இணையலாம் என்று செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையன் 10 பேரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
சிட்டி டிஸ்மாண்டில் என்று ரஜினி சொன்னதும் ரோபோ சிட்டி உடல் பாகங்களை அகற்றுவது போல.. அதிமுகவின் பாகங்களை செங்கோட்டையன் ஒவ்வொன்றாக அகற்றி தவெகவிற்கு கொண்டு வரப்போகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த சில நாட்களில் இதனால் சுடசுட.. பல அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது என்கிறார்கள் ரத்தம் கொதிக்க நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications