"ஓ.. என் மேலயே கை வெக்கறியா".. குடிபோதையில் போலீஸை அடித்த நடிகை பாபிலோனாவின் தம்பி.. அதிரடி கைது
குடிபோதையில் ரகளை செய்த பாபிலோனா தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: "என் மேலயே கை வைக்கறியா" என்று போலீஸாரை பார்த்து கேட்டதுடன், பளார் என்று கன்னத்தில் அறைந்து குடிபோதையில் ரகளை செய்துவிட்டார் நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி.. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்!
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை பாபிலோனா. இவர் தை பொறந்தாச்சு, உன்னை கொடு என்னை தருவேன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.

இவர் சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.. இவரது தம்பி விக்னேஷ் என்கிற விக்கி.. 35 வயதாகிறது. சம்பவத்தன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலிகிராமம், தசரதபுரம் 8-வது தெருவில் ஒருவர் போகிற, வருகிற வண்டிகளை மறித்து ரகளைசெய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.
இதனால் போலீசார் அந்தகுறிப்பிட்ட தெருவுக்குள் போலீசார் நுழைந்தனர்.. அப்போது விக்கி குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.. இதனால் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததால் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர்.
உடனே டென்ஷன் ஆகிவிட்ட விக்கி, "ஓ.. என் மேலயே கை வைக்கிறியா... என்னையே பிடிக்கிறியா" என்று சொல்லி ரோந்து வாகன டிரைவர் சங்கரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். இது குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு உடனடியாக தகவல் சொல்லப்படவும், தனிப்படை போலீசார் விரைந்து வந்து விக்கியை ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
இதையடுத்து சங்கர், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் தரவும், பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்கியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் சாலிகிராம் பகுதியே பரபரப்பாகிவிட்டது!












Click it and Unblock the Notifications