ஸ்டாலின் தமிழில் பேசியது மோடிக்கு புரியுமா? பிரதமரிடம் மேடையிலா கோரிக்கை வைப்பது - ஜி.கே.வாசன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு உட்படும் வகையில் உரையாற்றியிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் விரும்பவில்லை
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சை விமர்சித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய தினம் பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் சென்னைக்கு வருகை புரிந்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணித்து தமிழ் மொழி , கலாச்சாரம் என சிறப்பாக உரையாற்றிய வேளையில், தமிழக முதல்வர் அவர்கள் முக்கியப் பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக கொடுப்பதை விடுத்து விவாதத்திற்கு உட்படும் வகையில் உரையாற்றியிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

பிரதமரின் பேச்சு அருகை
நேற்றைய தினம் பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் சென்னை மாநகருக்கு வருகை புரிந்து தமிழக வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நாட்டிற்கு அர்ப்பணித்ததும் தமிழக மக்கள் நலன் சார்ந்தது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது , நாட்டின் பொருளாதாரம் உயரவும் வழி வகுக்கும். குறிப்பாக தமிழகத்தின் பெருமை , கலாச்சாரம் , தமிழ் மக்களின் திறமை ஆகியவற்றை எடுத்துக்கூறியது சிறப்பானது.

விவாதப்பொருளாக்காமல் பிரதமர் உரை
மேலும் முக்கியமாக மருத்துவம், தொழில் நுட்ப படிப்புகளை தமிழ் வழியில் படிக்கக்கூடிய நிலையை புதிய கல்விக்கொள்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர் உதவி செய்யப்படும் என்பதையும் தெரிவித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். இப்படி தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களுக்கான விழாவில் விவாதத்திற்கு உட்படாத வகையில் உரையாற்றியது தமிழக மக்களுக்கான நன்மை பயக்கும் தனது பயண நோக்கத்தை மிகச்சிறப்பாக நிறைவேற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது
மாறாக தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான பருத்தி நூல் விலை குறித்தும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை குறித்தும் குறிப்பிடாமல், உடனடித் தேவையான பருத்தி நூல் விலைக்குறைப்பை பற்றியும் உரையாற்றாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அது மட்டுமல்ல விவாதத்திற்கு உட்படும் நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தமிழகத்தின் பிரச்சனைகளை, தேவைகளை எடுத்துக்கூறுவது கடமை என்றாலும் கூட அதை எழுத்துப்பூர்வமாக , கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம். அதை விடுத்து முக்கியப் பிரச்சனைகளை பற்றி தமிழில் பேசியதால் உடனடியாக அது அந்த நேரத்தில் பிரதமர் அவர்களுக்கு தெரியாமல், கருத்து தெரிவிக்காத நிலை ஏற்படும்.

கச்சத்தீவு
குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவு பறிபோனது அதே கச்சத்தீவைப் பற்றி தமிழக முதல்வர் அவர்கள் பேசியதால் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்கக்கூடிய நிலை ஏற்படும் என்பது வெளிப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் நேற்றைய தின முக்கிய நிகழ்வான தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்ட விழாவில் விவாதப் பொருளாக்கும் வகையில் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடிதம் கொடுத்திருக்கலாம்
மேலும் தமிழகத்திற்கு பிரதமரின் வருகையால் தமிழக மக்கள் பெரும் பயனடைவார்கள் என்ற அதே வேளையில் தமிழக முதல்வர் அவர்கள் பருத்தி நூல் விலை பற்றி உரையாற்றி, முக்கியப்பிரச்சனைகளை ஆங்கிலத்தில் பேசி, கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம் என்பதையும் த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications