Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 3வது நாளாக இன்றும் உயர்ந்தது கொரோனா பாதிப்பு.. எச்சரிக்கை தரும் நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் கடந்த செப்டம்ர் 3ம் தேதி 1568 ஆக இருந்த பாதிப்பு. செப்டம்பர் 4 ம் தேதி 1575 ஆகவும் இன்று 1592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1607 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது கவலைக்குரியதாகும்.

Recommended Video

    C.1.2 அடுத்த உருமாறிய Corona.. Vaccine-க்கு கட்டுப்படாது.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1600 என்கிற நிலையில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துள்ளது என்றாலும், கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    தமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு


    அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,607பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,71,378 ஆக உயர்ந்துள்ளது.

     உயிரிழப்பு எவ்வளவு

    உயிரிழப்பு எவ்வளவு


    தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 5ம் தேதி மாலை நிலவரப்படி 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உயர்ந்துள்ளது.

    சரிந்தது

    சரிந்தது

    தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 16,315ல் இருந்து 16,282 ஆக சரிந்தது. கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருவதால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயராத வரை பிரச்சனை பெரிய அளவில் இல்லை என்றே நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். எனினும் சில நாட்களில் இந்தநிலை மாறலாம் என்ற அச்சமும் உள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 229 பேரும், சென்னையில் 165 பேரும், ஈரோட்டில் 104 பேரும், திருவள்ளூரில் 84 பேரும், தஞ்சாவூரில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2211 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+