தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 490 பேர் மரணம்! ஷாக் தந்த திண்டுக்கல், கடலூர்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 26,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இரண்டு அலைகளிலும் சேர்த்து 21,23,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 18,02,176பேர் மீண்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,96,131 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 26,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,23,029 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31,673 பேர் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,02,176 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 2,96,131 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு எவ்வளவு மரணம்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் 490 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கொரோனாவால் சென்னையில் 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டில் 50 பேரும், கோவையில் 32பேரும், திருவள்ளூரில் 26 பேரும், திண்டுக்கல் மற்றும் கடலூரில் தலா 20 பேரும் உயிரிழந்தனர்.

RT-PCR சோதனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளையும் தடுப்பூசி கொடுப்பதையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,56,839 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,72,04,120 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 1,67,397 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 2,78,42,512 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கோவை முதலிடம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், சேலம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக உள்ளது தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கோவையில் 3332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் இன்று 2467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 16534 பேரும், ஈரோடுக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 1496 பேருக்கும், சேலத்தில் 1338 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக நோயாளிகள் எங்கு
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தமிழகத்திலேயே சென்னையை முந்தி கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் தற்போது 40570 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் சென்னையில் அதைவிட குறைவாக 32069 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவை சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications