Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனல் காற்று வீசுதே...சன்டேயில் சூரியனுக்கு வந்த கோபம்..7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் நேற்றைய தினம் வெயில் சுட்டெரித்தது. 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் சூரியனின் கோபப்பார்வையால் பல ஊர்களில் அனல் பறந்தது.

அக்னி நட்சத்திர காலத்தில்தான் அனல் காற்று வீசும். ஏப்ரல் மாதத்திலேய அக்னியின் தாக்கம் ஆரம்பித்து விட்டது போல உணர முடிகிறது. வெப்பக்காற்றின் வேகத்தை நேற்றைய தினம் பல மாவட்டங்களில் உணர்ந்தனர். விடுமுறை தினமான நேற்று கோடை வெப்பத்தில் வேகத்தை தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

Tamil nadu 7 districts registered 100 fahrenheit heat says Met office

நேற்றைய தினம் அதிகபட்சமாக ஈரோட்டில் 101.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. அதே போல வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கோவை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியது.குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 63 டிகிரியும், குன்னூரில் 73 டிகிரியும் பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் பூமி குளிர மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடக்கு மற்றும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu 7 districts registered 100 fahrenheit heat says Met office

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திர காலம் ஆரம்பமாகிறது. வெப்ப அலை வீசக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+