தமிழக சட்டமன்ற தேர்தல்.. பம்பரமாக சுழலும் தலைவர்கள்! நாளைதான் பிரசாரத்திற்கு கிளைமேக்ஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு சரியாக 3 நாட்களே உள்ள நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
பிரசாரத்திற்கு இன்றும் நாளையும் மட்டுமே அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இறுதி நாளான நாளை முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் நிறைவு செய்ய உள்ளார். தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரசாரம் நிறைவு பெற்றவுடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இன்று தலைவர்கள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் இன்று தலைவர்களின் பிரசாரம் விவரங்கள் பின்வருமாறு:-
* காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி:- கன்னியாகுமரி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்:- சென்னை.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- எடப்பாடி.
* தவெக தலைவர் விஜய்:- சென்னை.
* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:- கடையநல்லூர்.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:- மதுராந்தகம், செய்யூர்.
* இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:- சென்னை.
* டிடிவி தினகரன்:- திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர்.
* அன்புமணி ராமதாஸ்:- மேட்டூர் (மேச்சேரி), எடப்பாடி (ஜலகண்டபுரம்), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சங்ககிரி (தாரமங்கலம்).
* அண்ணாமலை:- சென்னை.
* கமல்ஹாசன்:- திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு.
* ஜிகே வாசன்:- குன்னம், அரியலூர், ஒரத்த நாடு.
தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications