நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்!
சென்னை: நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான பிரமாணபத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. அவருக்கு எதிரான வழக்கு விவரங்கள் இதில் உள்ளன.
முக்கியமாக நாடு முழுக்க அவருக்கு எதிராக பதியப்பட்டு உள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒரு விவகாரத்திற்காக நாடு முழுக்க பல மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

காலம் உருண்டோடினாலும், சில சர்ச்சைகள் மட்டும் நிழலாய் தொடரும். அதற்குச் சரியான உதாரணம், 2023 செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய அந்தப் பேச்சு. "அப்பவே முடிஞ்சு போச்சு" என்று பலரும் நினைத்த நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரம், அந்தப் பழைய விவகாரம் இன்னும் அவரைச் சுற்றியே சுழன்று கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
அன்று ஒரு பேச்சு... இன்று வரை மூச்சு!
தமிழகத்தில் 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' உதயநிதி பேசியது, டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, நாட்டின் பல மூலைகளிலும் அவர் மீது சட்ட ரீதியான 'அம்புகள்' ஏவப்பட்டன. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில், அந்த ஒரே ஒரு பேச்சுக்காக உதயநிதி இன்றும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.
தேசம் முழுவதும் அணிவகுக்கும் வழக்குகள்:
அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணபத்திர விவரங்களின்படி, அந்தப் பழைய பேச்சுக்காகப் போடப்பட்ட வழக்குகளின் பட்டியல் இதோ:
உத்தரப் பிரதேசம் (ராம்பூர்): வடமாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ராம்பூரில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது.
மகாராஷ்டிரா (மும்பை): மும்பையின் மீரா ரோடு பகுதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகப் புகார்.
ராஜஸ்தான் (பியாவர்): இங்கும் சனாதன விவகாரத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனிநபர் புகார்கள் (Private Complaints): இவைதான் உதயநிதிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
பீகாரின் பாட்னா மற்றும் போஜ்பூர் நீதிமன்றங்களில் புகார்கள்.
ஜம்மு நீதிமன்றத்தில் ஒரு புகார்.
கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதிகளில் தனிநபர் வழக்குகள்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றத்திலும் அந்தப் பழைய பேச்சுக்காகப் புகார் பதிவாகியுள்ளது.
பிரமாணப் பத்திரம் சொல்லும் உண்மை!
தேர்தல் ஆணையத்தில் உதயநிதி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலில் இந்த 'சனாதன' வழக்குகள் தான் வரிசையாக அணிவகுக்கின்றன. "இத்தனை மாநில நீதிமன்றங்களிலும் உதயநிதி நேரில் ஆஜராக வேண்டுமா?" என்பதே அவரது ஆதரவாளர்களின் கவலையாக இருக்கிறது.
"வழக்குகளைக் கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் அல்ல, இதெல்லாம் திராவிட மண்ணின் கொள்கை முழக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்" என உதயநிதி தரப்பு கெத்து காட்டினாலும், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வேண்டிய சட்டச் சிக்கல்கள் அவரைச் சற்றே யோசிக்க வைத்துள்ளன. ஆனால் இப்போதைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டியது இல்லை.
அன்று உதயநிதி பேசியது, இன்றும் சட்ட ரீதியான விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2023-ல் வீசிய அந்தச் சனாதனக் காற்று, 2026 தேர்தலிலும் உதயநிதியின் 'அபிடவிட்' மூலம் அனலாகத் தகித்துக் கொண்டிருக்கிறது!
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications