முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. 2வது தேசிய கீதத்துடன் தொடங்கியது தமிழக சட்டமன்ற கூட்டம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 17-ஆவது கூட்டத்தொடர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2வத தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற கூட்டம் தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழுமையான கூட்டத்தொடர் இதுவாகும்.

இன்று தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்லேகர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதன் தமிழாக்கத்தை வாசித்தார். இந்த உரையில் தவெக அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல ஆளுநர் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட அலுவல் ஆய்வுக் குழு கூடும். இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இத்தொடர் சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். கூட்டத்தொடரின் இறுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்குவார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவிய மோதல் போக்குகள் தற்போது இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை குறித்த சமீபத்திய சர்ச்சைகள் பேரவையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அப்படியான சர்ச்சைகள் எதுவும் எழவில்லை.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications