Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டை இழிவுபடுத்திட்டார்..அண்ணாமலை போட்ட ட்வீட்! ஸ்ட்ரெய்ட்டா ’அவர்’ மீதே அட்டாக்.. என்னவாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அந்நிய மண்ணிலிருந்து தாய்நாட்டை ராகுல் காந்தி இழிவு படுத்தி உள்ளார் என்றும், இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார் பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திரா காந்தி, ராகுல் காந்தி ஆட்சி காலத்தில் தான் இந்தி திணிக்கப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். டெக்ஸாஸில் அவருக்கு இந்திய வம்சாவளியினரும் காங்கிரஸ் கட்சி அயலக பிரிவு நிர்வாகிகளும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

annamalai rahul gandhi congress

தொடர்ந்து டல்லாஸ் நகரில் பேசிய அவர்,” இந்தியா ஒரே சிந்தனையை கொண்டுள்ளது என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இந்த முறை மக்கள் பிரதமரை கண்டும் பாஜகவை கண்டும் அஞ்சவில்லை என்பதன் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக இருக்கிறது பேசி இருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நிய மண்ணிலிருந்து தாய்நாட்டை ராகுல் காந்தி இழிவு படுத்தி உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அன்னிய மண்ணில் இருந்து தனது தாய்நாட்டை இழிவுபடுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இன்று அவர் இந்தி திணிப்பு போன்ற இல்லாத விஷயங்களைப் பேசுகிறார். அவரது பாட்டி இந்திரா காந்தி அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய கல்விக் கொள்கை தான் அனைத்து இந்தியர்களுக்கும் இந்தியைக் கட்டாயமாக்கியது.

அவரது தந்தை திரு ராஜீவ் காந்தி அவர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கை, இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக இந்தி மொழியைப் பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஊக்கமளித்தது. முதன்முறையாக, 2020 இல் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையானது தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது.

நம் நாட்டின் அனைத்து குடிமக்கள் மீதும் இந்தி மொழியை திணித்தது யார் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? 2011 ஆம் ஆண்டு அலுவல் மொழி குறித்த நாடாளுமன்றத்தின் 9வது குழுவின் அறிக்கையில் இந்தியை ஊக்குவிக்க 117 பரிந்துரைகள் செய்யப்பட்டன? ராகுல் காந்தி அந்தப் பரிந்துரைகளைப் படித்து, பிராந்திய மொழிகளுக்காகக் காட்டப்படும் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததற்காகவும், இந்தியைத் திணிப்பதற்காகவும் தன்னைத் தானே கண்டித்துக் கொண்டார்.

நமது மாண்புமிகு பிரதமர் தங்கள் தாய்மொழிக்காக என்ன செய்தார் என்று பலர் குரல் கொடுக்க முடியும், பிரதமர் மோடி எனது தாய்மொழியான தமிழுக்கு என்ன செய்தார் என்பதை சொல்ல நான் கடமைப் பட்டுள்ளேன். முதன்முறையாக ஐ.நா.வில் நம் நாட்டின் பிரதமர் ஒருவர் தமிழில் பேசினார். 74 வது ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய நமது மாண்புமிகு பிரதமர், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறினார், இது உலகம் ஒன்று என்பதை குறிக்கிறது.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. காசி தமிழ் சங்கம் மற்றும் சௌராஷ்டிர தமிழ் சங்கம் ஆகிய இரண்டு கலாச்சாரங்களின் சங்கத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்வதை முதன்முறையாக இந்தியா கண்டது. காசி தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியில், நமது மாண்புமிகு பிரதமர் திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக, 13 மொழிகளில் திருக்குறளையும், 2வது பதிப்பில் பிரெயிலிலும் வெளியிட்டார்.

தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, ₹24 கோடி செலவில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தை நமது மாண்புமிகு பிரதமர் திறந்து வைத்தார். சோழர்களின் பெருமை, காலனித்துவ ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் சின்னமான செங்கோல், ஒரு அருங்காட்சியகத்தில் வாக்கிங் ஸ்டிக்காக வெளியேற்றப்பட்டது, இப்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அதன் சரியான இடத்திற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

வட இலங்கையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க, நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் ₹120 கோடியில் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை நிர்மாணிக்க அனுமதித்தார். நமது மாண்புமிகு பிரதமர் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது விஜயத்தின் போது பிரான்சின் செர்ஜி நகரில் புனித திருவள்ளுவருக்கு ஒரு சிலையை அறிவித்தார், அது டிசம்பர் 2023 இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார், மேலும் 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பிரதமர் மோடி பிராந்திய மொழியை வளர்க்க செய்ததில் 10% கொடுக்க செய்ய முடியவில்லயே என்ற வேதனை காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது புரிகிறது” என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+