Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு முதல் டெல்டா வரை.. ஒவ்வொரு ஊருக்கும் தங்கம் தென்னரசு கொடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலாகும் சூழலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலானது. நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டசபையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Tamil nadu Budget 2026 From Chola to Noyyal Museum Finance minister Thangam Thennarasu announced

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மேலும், ஜனவரி 25ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

திருக்குறளை ஐநா மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பெரியார் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிட்டுள்ளோம் என்றும் அம்பேத்கர் புத்தகங்களை எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும், "இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே, கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது.

இது தவிரத் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் நாவாய் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகத்தில் புதிய அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+