கொங்கு முதல் டெல்டா வரை.. ஒவ்வொரு ஊருக்கும் தங்கம் தென்னரசு கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலாகும் சூழலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலானது. நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டசபையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மேலும், ஜனவரி 25ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருக்குறளை ஐநா மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பெரியார் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிட்டுள்ளோம் என்றும் அம்பேத்கர் புத்தகங்களை எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும், "இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே, கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது.
இது தவிரத் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் நாவாய் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகத்தில் புதிய அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது" என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications