Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடிக்கு காதி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனிடம் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை இருந்தது. தற்போது இதில் காதி துறை பிரித்து பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Tamil Nadu Ponmudi Rajakannappan

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. எனவே தேர்தலை மனதில் வைத்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் தங்கள் துறையில் எந்த நலத்திட்டங்களையும் பெண்டிங் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழக்கூடாது என்பதில் கட்சி தலைமை கவனமாக இருக்கிறது.

புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைக்கு சட்டமன்றத்தில் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏறத்தாழ 50,000 பேர் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, துறை சார்ந்த திட்டங்களையும் முடித்துவிட்டால் அதன் பலன்களை தேர்தலில் அறுவடை செய்துக்கொள்ளலாம் என்று திமுக தலைமை கணக்குப்போடுகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் தற்போது அமைச்சரவை இலாகா மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சியில் இலாக்காக்கள் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இப்போது ராஜகண்ணப்பன் வசம் இருந்த பால்வளத்துறை முன்னர், முதலில் ஆவடி நாசர் வசம்தான் இருந்தது. ஆனால் பால் கொள்முதலில் முறைகேடு இருப்பதாகவும், தனியார் பால் நிறுவனங்கள் இதன் மூலம் கொழிந்து வளர்ந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. மட்டுமல்லாது ஆவின் நிலையத்திற்கு வரும் பால், வழியில் கொள்ளையடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பின.

இதனையடுத்து இந்த துறை, அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு, கன்னியாகுமரியை சேர்ந்த மனோதங்கராஜிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை. அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பு, பால் கொள்முதல் நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவது என மனோவும் முடிந்தவரை வேகம் காட்டி வந்தார். ஆனால், பால் விநியோகர்கள் பிரச்சனை மூலம், அமைச்சர் பொறுப்புக்கே ஆபத்து வந்துவிட்டது. பால்வளத் துறை இலாகா, ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடக்கத்தில் ராஜகண்ணப்பனிடம் போக்குவரத்து துறை இருந்தது. அங்கு எழுந்த சலசலப்புகள் விவாதங்களாக வெடிக்கவே அந்த துறை சிவசங்கருக்கு கைமாற்றப்பட்டது. அதற்கு பதிலாக பால்வளம் மற்றும் காதி துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது காதி துறை பொன்முடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவே தொடர்வார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+