குழந்தைகள் படிக்கிறாங்கனு நினைக்காதீங்க..’இதை’ கூட செய்யலாம்! பெற்றோர்களுக்கு முருகானந்தம் அட்வைஸ்
சென்னை: இரவில் தங்களுடைய குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களுடைய நடத்தையை நாம் பார்க்கவேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த, பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம் திரையிடுவதை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,” தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், இணையம், கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளன. தொழில்நுட்பம் (Technology) இரு பக்கமும் கூராக கொண்ட ஒரு வாள் போன்றது. எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
இணையவழி சாதனங்களின் பயன்பாட்டைப் பொறுத்தவரைக்கும், தொழில் சார்ந்த பயன்பாடுகளையெல்லாம் தாண்டி, தற்போது பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவது என்பது மிகப்பரவலாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது காலப்போக்கில் இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் போகும். ஆனால், இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டுகள் இவையெல்லாம் சமுதாயத்தில் எதுபோன்ற தீமைகளையெல்லாம் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் கருத்திற்கொண்டு தான், இந்தியாவிலேயே முதன்முறையாக The Tamil Nadu Prohibition of Online Gambling and Regulation of online games Act, 2022 என்ற சட்டத்தை உருவாக்கியது.
இது போன்ற ஒரு சட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதன் மூலம் அமைக்கப்பட்ட தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இந்த விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்கும், சூதாட்டத்தை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இணையவழி விளையாட்டின் மீது உள்ள மோகம், அடிமை என்பது மிகப்பரவலாக பரவி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக மிக வேகமாக அதிகமாக வளர்ந்து வருகிறது.
Internet Gaming Disorder សំ Pathological Gaming Disorder 5 Mental Disorder ஆகும். இதை நாம் தவிர்க்க வேண்டும். இதற்கு நாம் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். 2019ஆம் ஆண்டில் கோவிட் ஏற்பட்ட காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால், இணையவழிக் கல்வி என்ற போதுதான் அந்த முறைக்கு சென்றோம். எங்கள் வீட்டில் என் மகனுக்கெல்லாம் மொபைல் போன் கொடுத்தது கிடையாது. ஆனால், கோவிட் வந்த சமயத்தில் வேறு வழியில்லை. ஆன்லைன் வகுப்பு என்று சொன்னதால் மொபைல் போன் நாம் வழங்க வேண்டியதாக போய்விட்டது. 2023 -இல் ஒரு ஆய்வறிக்கை கிட்டதட்ட 5% பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி இருக்கிறது என்று சொல்கிறது. ஆனால், அதற்கு மேலும் இருக்கலாம்.
அரிஸ்டாட்டில் அவர்கள் "Man is by nature a Social Animal" என்று சொல்லியிருக்கிறார். அதாவது, மனிதன் தொடக்க காலத்திலிருந்தே கூட்டமாகத் தான் வாழ்ந்து இருக்கிறான். அவன் தனியாக இருந்தது இல்லை. அவன் ஒரு சமுக விலங்கு . அவன் தனியாக, சமுதாயத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் இருக்கிறான் என்றால் அந்த மனிதன் ஒரு விலங்காக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஏன் என்றால் மனிதன் என்பவன் கூட்டமாகத் தான் இருக்க முடியும்.
அது தான் அவனது இயற்கை (Nature). அந்த இயற்கைக்கு மாறாக இந்த Online Gaming அவனை மாற்றுகிறது. மாணவர்கள் ஒரு தீவாக அவர்களை ஒரு நிழல் உலகத்தில் அவர்கள் உலாவிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருப்பது போல் Online Gaming உருவாக்குகிறது.
இங்கு குழந்தைகளெல்லாம் வந்திருக்கிறீர்கள். பாரதியார் எழுதிய "பாப்பா பாட்டு" மிகவும் பிரபலமான பாட்டு. ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, என்று பாடியுள்ளார். Online Game-ல் ஓடியும் விளையாட முடியாது, கூடியும் விளையாட முடியாது. ஆதலால், இது ஒரு வித்தியாசமான ஒரு விளையாட்டு. உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, மாணவர்களின் வளர்ச்சியை மிக வெகுவாக பாதிக்கும். அதனால், நிறைய அரசுகள் இளைஞர்களுக்கு, 18 வயது நிறைவடையாதவர்களுக்கு இந்த விளையாட்டுக்களை உபயோகபடுத்த முடியாதபடி இதனை தடை (ban) செய்கிறார்கள். சீனா, ஜப்பானில் தடை செய்திருக்கிறார்கள். இன்றைக்குக்கூட பத்திரிகையில் படித்தேன். ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதிற்கு கீழ் உள்ள மாணவ- மாணவியர்களுக்கு இந்த online game-ஐ தடை செய்யவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை மிக மிக முக்கியமானது.
இரவில் தங்களுடைய குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் online game விளையாடிக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களுடைய நடத்தையை நாம் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். வெளியில் சென்று விளையாடவேண்டும்.
16 அல்லது 18 வயது வரைக்கும் சிலர் social media-விற்கு அடிமையாகிறார்கள். செல்ஃபோனையும் முடிந்தவரைக்கும் அவர்களிடம் கொடுக்காமல் இருக்கலாம். அந்த இளம்வயதில் அவர்களுக்கு எது சரி, என்று தெரியாது” என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications