இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன்
சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவர் சி. ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் சில நாட்களிலேயே தனது தேர்தல் வாக்குறுதியான "ஊழலுக்கு எதிரான அரசியல்" என்பதை செயல்படுத்தத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தி.மு.க முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் மீது எடுக்கப்பட்டுள்ள இரட்டை அதிரடி நடவடிக்கைகள், தி.மு.க முகாமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

முதல்வர் விஜய் தனது ஆரம்ப கால ஆட்சியிலேயே 'நோ மெர்சி' (No Mercy) பாணியை கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் ஊழலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்த விஜய், இப்போது அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனால் தி.மு.கவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மூவ் 1: கே.என்.நேரு மீது DVAC FIR
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாகக் கூறப்படும் புகாரில், முந்தைய தி.மு.க அரசு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்யாமல் தடுத்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மறுஆய்வு மனுக்கள் மூலம் காலம் கடத்தப்பட்டது.
ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனே இந்த விவகாரத்தில் சட்டத்தின் வேகத்தை அனுமதித்தார். நீதிமன்றத்தில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கே.என்.நேரு மீது அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், கடந்த காலங்களில் புகார்களை மூடி மறைக்க முயன்ற பாதுகாப்பு உடைக்கப்பட்டுள்ளது.
மூவ் 2: செந்தில் பாலாஜிக்கு ED செக் - ஆளுநருக்கு கோப்பு
இதைவிட பெரிய அதிரடியாக, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுத்த முடிவு தமிழக அரசியலில் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' எனக் கருதப்படுகிறது. 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் 'வேலைக்கு லஞ்சம்' வழக்கில் அமலாக்கத்துறை (ED) செந்தில் பாலாஜி மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் வழக்கு தொடர மாநில அரசின் ஒப்புதல் (Prosecution Sanction) தேவைப்பட்டது. முந்தைய தி.மு.க அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் கோப்பை நிலுவையில் வைத்திருந்தது.
முதல்வர் விஜய், மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய ரகசிய விசாரணை குறிப்புகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து, முழு ஒப்புதல் அளித்தார். இந்த கோப்பு இப்போது ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதலுக்காக ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன், செந்தில் பாலாஜி மீதான ED விசாரணை தீவிரமடையும்.
இந்த இரு நடவடிக்கைகளும் புதிய வழக்குகளை உருவாக்கியவை அல்ல. மாறாக, முந்தைய அரசு முடக்கி வைத்திருந்த கோப்புகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் உள்ளன. எனவே, இது அரசியல் பழிவாங்கல் அல்ல, அரசியல் நேர்மை என்கின்றனர் ஆதரவாளர்கள். இரு வழக்குகளும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களின் கண்காணிப்பில் உள்ளவை.
தேர்தலுக்கு முன்பு த.வெ.கவை 'பாஜக பி-டீம்' என விமர்சித்த தி.மு.க, இப்போது பாஜகவின் மத்திய அமைப்பான ED-க்கு விஜய் அளித்த ஒப்புதலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளது. புதிய அரசு யாருக்கும் அடிபணியாது, யாருக்கும் சலுகை காட்டாது என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
முதல்வர் ஜோசப் விஜய்யின் இந்த அதிரடி ஆட்டம், தி.மு.க மூத்த தலைவர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிற்க வேண்டும்" என்பதை விஜய் அரசு வலியுறுத்தி வருகிறது.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications