தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே கொரோனா புதிய உச்சம்... 20,768 பேர் பாதிப்பு - 153 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 20,768 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 153 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 20,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 153 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,20,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தினசரியும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினசரியும் சுகாதாரத் துறை வெளியிடுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 20,768 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,07,112 பேர் பாதிப்பு

12,07,112 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய தினம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருங்கிய நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,07,112 ஆக அதிகரித்துள்ளது.

1,20,444 பேர் சிகிச்சை

1,20,444 பேர் சிகிச்சை

இன்று ஒரே நாளில் 17,576 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,72,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 1,20,444 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

இன்று ஒரே நாளில் 1,43,083 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,29,56,942 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த பரிசோதனை

மொத்த பரிசோதனை

இன்று ஒரே நாளில் 1,37,224 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,25,61,835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

153 பேர் மரணம்

153 பேர் மரணம்

இன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,346 பேராக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+