தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்கு கொரோனா தொற்று...67 பேர் உயிரிழப்பு!!
சென்னை: தமிழகத்தில் இதுவரைக்கும் 77,25,962 பேருக்கும், இன்று மட்டும் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 6,35,855 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தில் 45,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 91,984 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 77,25,962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உயிரிழந்த 67 பேரில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 35 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 9,984 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று புதிதாக 1096 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்துடன் சென்னையில் 1,76,779 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் சென்னையில் மட்டும் 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகபட்சமாக சென்னையை அடுத்து கோவையில் 473 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் இந்த மாவட்டத்தில் 369 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் புதிதாக 322 பேருக்கு தொற்று ஏற்பட்டு, இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 45,279 பேர் நேற்று சிகிச்சை பெற்று வந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 45,135 ஆக குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications