மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
சென்னை: தமிழகத்தில் தற்போது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாக உள்ள 11345 பேரில், சுமார் 10 ஆயிரம் பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 208 பேரில் 185 பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது புள்ளி விவர ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதில் 95 சதவீதம் தொற்றுகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் உள்ளது. சென்னையில் கொரோனா பரவலை மிகமிக கடுமையாக உள்ளது.

சென்னையில் உச்சம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 1286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் மிகப்பெரிய உச்சமாக 1012 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை 14,316 பேர் குணம் அடைந்துள்ளனர். 11345 பேர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனையில் உள்ளனர். 208 பேர் உயிரிழந்துள்னர்.

கொரோனா நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாக மருத்துவமனையில் தற்போது உள்ள 11345 பேரில் 9692 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகளாக 8405 பேர் மருத்துவமனையில் உள்ளார்கள். உயிரிழந்த 208 பேரில் 185 பேர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் இறந்துள்ளனர். 85.4 சதவீத நோயாளிகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

எங்கு அதிக பாதிப்பு
இதுதவிர தூத்துக்குடியில் 135 பேரும், சேலத்தில் 153 பேரும், கள்ளக்குறிச்சியில் 109 பேரும், திருநெல்வேலியில் 98 பேரும், மதுரையில் 96 பேரும் கொரோனா தொற்றுடன் நோயாளிகளாக உள்ளனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிந்துள்ளது. திருப்பூர்(0), நீலகிரி (0),ஈரோடு (1), பெரம்பலூர் (3), சிவகங்கை (4), கிருஷ்ணகிரி (8), கரூர் (4), தருமபுரி (4), புதுக்கோட்டை (8) ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு முழுமையாக சரிந்துள்ளது. இதுதவிர அரியலூர் (11), கோவை (15), நாகப்பட்டினம் (13), தேனி (15), திருப்பத்தூர் (11), திருவாரூர் (15), திருச்சி (16), வேலூர் (13) ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் மிக குறைவாகவே உள்ளனர்.

நேற்று 11 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை (20), தென்காசி (21), தஞ்சாவூர் (23), ராமநாதபுரம் (35), கன்னியாகுமரி (32), திண்டுக்கல் (22), கடலூர் (35), விழுப்புரம் (24), விருதுநகர் (38) ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிதமான அளவில் உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 14316 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9034 பேர் குணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 671 பேரும், திருவள்ளூரில் 630 பேரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் உயிரிழப்பது வயதானவர்கள் தான். உடல் ஆரோக்கியம் குன்றியவர்களே பெரிதும் இறக்கிறார்கள். நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். இதில் அனைவருமே 48 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒருவரை தவிர அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications