சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் 5,528 பேர் தொற்றால் பாதிப்பு.. குறைந்துவரும் பலி.. பாதிப்பு எண்ணிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைப் போலவே இன்றும் கிட்டத்தட்ட ஒரே அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று கொரோனா தொற்றால் 5,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 53 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 48 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அரசு பரிசோதனை எண்ணிக்கையை 82 ஆயிரம் என்கிற அளவில் தொடரந்து நடத்தி வருகிறது. கொரானாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை நேற்றை போல் இன்றும் 6000த்தை தாண்டி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 5 மாவட்டங்களில்... கொரோனா அதிகரிக்குமாம்... தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை!! இந்த 5 மாவட்டங்களில்... கொரோனா அதிகரிக்குமாம்... தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,231
த்தில் இருந்து 4,29,416 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1009 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 567 பேரும, கோவையில் 580 பேரும், கடலூரில் 476 பேரும், செங்கல்பட்டில் 362 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 8,154 பேர் பலி

இதுவரை 8,154 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 78 பேர் பலியான நிலையில் இன்று அதைவிட குறைவாக 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் 7 பேரும், நாகப்பட்டினத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 4 பேரும் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை மிக அதிகம்

பரிசோதனை மிக அதிகம்

தமிழகத்தில் இன்று 85,473 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 56,30,323 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 83,411 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 54,49,635 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் நேற்று 49,203 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று 48,482 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,606ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 10845 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 440 பேரும், சேலத்தில் 300 பேரும், திருவள்ளூரில் 296 பேரும், செங்கல்பட்டில் 279 பேரும், கடலூரில் 263 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamil nadu coronavirus positive cases rises 5,528 on Today. 64 people have been killed by corona in a single day today. Similarly,6,185 people have discharged from corona in tamilnadu on septemer 10
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X