எல்லா மாவட்டத்திலும் கிடுகிடு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 13 மாவட்டங்கள்.. ஷாக் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

செனனை : தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்று தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.ஆனால் உயிரிழப்பை தடுக்கவும், விரைவாக மக்களை காக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாகி வருகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 1205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது
செங்கல்பட்டில் 242 பேர், திருவள்ளூரில் 219 பேர், தூத்துக்குடியில் 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சதம் அடித்த மாவட்டங்கள்

சதம் அடித்த மாவட்டங்கள்

மதுரையில் 192 பேர், வேலூரில் 140 பேர், விருதுநகரில் 143 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 145 பேர், சேலத்தில் 127 பேர், திருச்சியில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தேனியில் 108 பேர், திருவண்ணாமலையில் 103 பேர், கன்னியாகுமரியில் 105 பேரும், ஈரோட்டில் 15 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் 82 பேரும், கோவையில் 43 பேரும், காஞ்சிபுரத்தில் 63 பேரும், ராமநாதபுரத்தில் 85 பேரும், புதுக்கோட்டையில் 36 பேரும், திருப்பத்தூரில் 31 பேரும், திருவாரூரில் 27 பேரும், விழுப்புரத்தில் 41 பேரும், திருப்பூரில் 24 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 9 பேரும், கடலூரில் 13 பேரும், தர்மபுரியில் 15 பேரும், ராணிப்பேட்டையில் 13 பேரும், தென்காசியில் 9 பேரும், திண்டுக்கல்லில் 8 பேரும், அரியலூரில் 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 497
  • செங்கல்பட்டு 7635
  • சென்னை 74969
  • கோவை 1071
  • கடலூர் 1493
  • தர்மபுரி 224
  • திண்டுக்கல் 750
  • ஈரோடு 327
  • கள்ளக்குறிச்சி 1621
  • காஞ்சிபுரம் 3099
  • கன்னியாகுமரி 1070
  • கரூர் 190
  • கிருஷ்ணகிரி 225
  • மதுரை 5482
  • நாகப்பட்டினம் 347
  • நாமக்கல் 150
  • நீலகிரி 181
  • பெரம்பலூர் 172
  • புதுக்கோட்டை 534
  • ராமநாதபுரம் 1691
  • ராணிப்பேட்டை 1415
  • சேலம் 1630
  • சிவகங்கை 720
  • தென்காசி 598
  • தஞ்சாவூர் 625
  • தேனி 1495
  • திருப்பத்தூர் 379
  • திருவள்ளூர் 6075
  • திருவண்ணாமலை 2861
  • திருவாரூர் 681
  • தூத்துக்குடி 1949
  • திருநெல்வேலி 1551
  • திருப்பூர் 288
  • திருச்சி 1273
  • வேலூர் 2486
  • விழுப்புரம் 1411
  • விருதுநகர் 1738
    • விமான நிலைய கண்காணிப்பில் 534
    • (வெளிநாடு)

      • விமான நிலைய கண்காணிப்பில் 402
      • (உள்நாடு)

        • ரயில் நிலைய கண்காணிப்பில்: 432
குறையும் பாதிப்பு

குறையும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3680 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக இன்று ஒரே நாளில் 4163 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82324 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 46105 பேர் மட்டுமே ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+