Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 மாவட்டங்களில் வேகமாக குறையும் தொற்று.. கோவை, கடலூரில் மோசமாகும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டஙகளில் 100க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் சரசரவென சரிந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 51,458 பேர் மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11264 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4796 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3742 பேரும், சேலத்தில் 3092 பேரும், செங்கல்பட்டில் 2723 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்

மாவட்ட நிலவரம்

தமிழகத்தில் இன்று 5793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்னையில் கொரோனாவால் இன்று 955 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், செங்கல்பட்டில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 272 பேரும், திருவள்ளூரில் 246 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை தஞ்சை நிலவரம்

ராணிப்பேட்டை தஞ்சை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 118 பேரும், ஈரோட்டில் 118 பேரும், கள்ளக்குறிச்சியில் 184 பேரும், கன்னியாகுமரியில் 116 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 111 பேரும், நாகப்பட்டினத்தில் 136 பேரும், புதுக்கோட்டையில் 100 பேரும், ராணிப்பேட்டையில் 135 பேரும், சேலத்தில் 122 பேரும், தஞ்சாவூரில் 150 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் மிக குறைவு

பெரம்பலூரில் மிக குறைவு

திருவாரூரில் 123 பேரும், தூத்துக்குடியில் 50 பேரும், திருநெல்வேலியில் 153 பேரும், திருச்சியில் 111 பேரும், வேலூரில் 158 பேரும், விழுப்புரத்தில் 130 பேரும், விருதுநகரில் 67 பேரும், தர்மபுரியில் 24 பேரும், கரூரில் 43 பேரும், கிருஷ்ணகிரியில் 86 பேரும், நாமக்கல்லில் 96 பேரும், நீலகிரியில் 48 பேரும், பெரம்பலூரில் 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    சென்னையா இது.. லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் சன்டேயே மிக மோசம்! - அதிர்ச்சி தரும் வீடியோ
    சென்னையில் 17 பேர் பலி

    சென்னையில் 17 பேர் பலி

    தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதிபட்சமாக சென்னையில் 17 பேரும், கோவையில் மற்றும் கடலூரில் தலா 5 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருப்பூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர். வேலூர், செங்கல்பட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம், திருநெல்வேலி உள்பட 7 மாவட்டங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக 2862 பேர் பலியாகி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+