ரத்தாகிறதா தமிழக சட்டசபை தேர்தல்? உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்தவர் மனுத்தாக்கல்.. பின்னணி
டெல்லி: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான், ''தமிழகத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இது அரசியல் சாசனத்துக்கு மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது. இதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்'' என்று மதுரை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. மக்களை ஏமாற்றம் வகையில் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது.

வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு, நகை, பணம், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அரசியல் சசான விதிகளுக்கு மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கே நேரடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்படியான சூழலில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு எப்போது விசாரணைக்கு வரும்? இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டாலும் கூட தேர்தல் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
கோவை ஷாக்! அண்ணாமலை - வானதி மோதலில் அந்த 1 மணி நேரத்தில் நடந்தது என்ன? வெளியே வராத திருப்பம் -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்! -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
ABP survey: திமுக கூட்டணி 170+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்குமாம்! பரபரக்கும் சர்வே! -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கும்.. சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு! -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
மணிக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயமா அய்யா? தருமபுரியில் சௌமியாவுக்கு ராமதாஸ் வைத்த செக்? -
சுயேச்சைகளே இல்லை.. வெறும் 5 பேர்தான்! தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான்











Click it and Unblock the Notifications