கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து புதுக் கூட்டணி க்கான ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் தமிழக சட்டமன்ற களத்தில் 5 முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.
மகன் அன்புமணியை பழிவாங்க போட்டி
அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தனது மகன் அன்புமணியை பழிவாங்க அவர் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக தனது சாரிபில் வேட்பாளர்களை நிறுத்தி அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்று ராமதாசும், வளர்த்து ஆளாக்கி முதல்வர் நாற்காலியில் தன்னால் அமர வைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி துரோகியாக மாறிவிட்டதால் அவரது தலைமையிலான அதிமுகவை தென் மாவட்டங்களில் தோற்கடித்து எடப்பாடிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சசிகலாவும் திட்டமிட்டதால் ராமதாசும் சசிகலாவும் கைக்குலுக்கியி ருக்கிறார்கள்.

துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் இவர்கள் இருவரை யும் இணைத்துள்ளது என்கிறார்கள். ராமதாஸ்-சசிகலா சந்திப்பில், தேர்தல் செலவு களுக்கு எம்மிடம் பணம் இல்லை என்கிற புலம்பல் பாட்டை ராமதாஸ் பாடியிருக்கி றார். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் ; கவலைப்படாதீர்கள் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளார் சசிகலா.
234 தொகுதிகளிலும் போட்டி
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லப்பட்டாலும் தேர்ந்தெடுக்க ப்பட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்றும் ராமதாசுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், 134 தொகுதிகளில் பாமகவும், 100 தொகுதிகளில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியும் போட்டியிடலாம் என சசிகலா சொல்லியிருக்கிறார். அதனால்தான் 134 தொகுதிகளில் போட்டியிட தங்கள் தரப்பில் ஆட்கள் இருக்கிறார்களா? என ஆராய்ந்துள்ளது தைலா புரம் தோட்டம்.
வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால் 134 தொகுதிகளுக்கு ஆட்களை நிறுத்தி விட முடியும். ஆனால், தமிழகம் முழுவதும் தானே தொகுதிகளை பரவலாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்கையில் தென் தமிழகத்தில் நமக்கு ஆட்களே இல்லையே ? அதனால் தென் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு எங்கே போவது ? என ஜி.கே.மணியிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டி
இதனையடுத்துத்தான் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்கிற பேச்சு தைலாபுரம் தோட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து சசிகலாவிடம் ராமதாஸ் விவாதித்திருக்கிறார். அப்போது, தென் மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகளுக்கு உங்களிடத்தில் ஆட்கள் இல்லையோ அங்கு எங்கள் சார்பில் சிலரை அறிமுகம் செய்கிறோம் . அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் எங்களுக்கு வேட்பாளர்கள் இல்லாத போது உங்களிடம் இருந்தால் அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என ஒரு வித்தி யாசமான டீலிங் பேசப்பாடிருக்கிறது.
ஆக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி உருவாகி விட்டாலும், வேட்பாளர்கள் பஞ்சம் அவர்களின் இருவர் தரப்பிலும் உருவாகியிருக்கிறது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications